ஆதில் பாக்கிர் மாக்காரின் மரணத்தில் எதுவித சந்தேகமுமில்லை!
Tuesday, October 18th, 2016இலண்டனில் உயிரிழந்த, ஆதில் பாக்கிர் மாக்காரின் மரணத்தில் எவ்வித சந்தேகமுமில்லை என ஸ்கொட்லாந் யாட் பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் மகனும் சட்டத்தரணியுமான ஆதில் பாக்கீர் மாக்கார்(25), இலண்டனில் கடந்த புதனன்று(12) காலமானார்.
இவர், பொருளாதாரம் மற்றும் அரசியல் விஞ்ஞானத்துக்கான இலண்டன் பல்கலைக்கழகத்தில் ஒப்பாய்வு அரசியற்றுறையில் முதுமானிக் கற்கைகளை மேற்கொண்டு வந்த நிலையிலேயே காலமாகியுள்ளார். சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அவர், தான் தங்கியிருந்த அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
23 வருடங்களுக்குப் பின் யாழில் காணி விடுவிப்பு!
இன்று 1,400 மெட்ரிக் தொன் எரிவாயு விநியோகம் - தேவை அடிப்படையில் முன்னுரிமை என லிட்ரோ கேஸ் நிறுவனம் அ...
பிரச்சினைகளை பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்த்துக்கொள்ளுமாறு தூய சிங்களத்தில் கூறியும் பணிப்புறக்கணிப்ப...
|
|