ஆசிரியையின் கோபத்தால் தீக்கிரையானது புத்தகங்கள்!
Wednesday, October 25th, 2017தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவனின் பாடப் புத்தகங்களை பாடசாலையில் வைத்து ஆசிரியை ஒருவர் தீக்கிரையாக்கியுள்ளார்.
வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புதிய வகுப்பறைக்கு இடம் மாறிச் சென்ற தினத்தில் மாணவன் பாடசாலைக்குச் சமூகமளிக்கவில்லை. ஆசிரியை மாணவன் பாடசாலையில் விட்டுச் சென்ற புத்தகங்களைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்.
மேற்படி ஆசிரியை நடத்திய தனியார் புலமைப்பரிசில் வகுப்பிற்கு மாணவன் சமூகமளிக்காத கோபத்தினால் ஆசிரியை இவ்வாறு செய்துள்ளதாக மாணவனின் பெற்றோர் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.
ஆசிரியையின் தனியார் வகுப்பில் கல்வி கற்காத 21 மாணவர்களைப் பல்வேறு வழிகளில் இந்த ஆசிரியை துன்புறுத்தியுள்ளதாகவும் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.
Related posts:
அர்த்தமற்ற இனவாதம்? - அமைச்சர் காமினி விஜித் விஜய்முனி சொய்சா
கொரோனா மருந்து தொடர்பில் இலங்கையிடம் உதவி கோரிய உலக சுகாதார ஸ்தாபனம்!
அனைத்து பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மாணவர் அடையாளக் குறியீடு அறிமுக - கல்வ...
|
|