இலங்கையில் 14 ஆயிரம் காசநோயாளர்கள் கண்டுபடிப்பு!

Wednesday, March 21st, 2018

சுமார் 4000 காச நோயாளர்கள் நாட்டில் சிகிச்சை பெறாமல் இருப்பதாக இலங்கை சுவாச நோய் விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் 14ஆயிரம் காசநோயாளர்கள் உள்ள நிலையில் 10 ஆயிரம் பேர் மாத்திரமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நோய் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான கருத்து நிலவுகின்றது.  ஆனால் இந்த நோய்க்கு சிகிச்சை பெறுவதன் மூலம் குணப்படுத்தமுடியும்.

மேலும் இம்மாதம் 24ஆம் திகதி காசநோயாளர் தடுப்புதினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: