அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் – நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு!
Friday, July 5th, 2024
அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
நலன்புரி நலன்கள் சபையுடன் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட கணக்கெடுப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாத மக்களுக்கு அடுத்த வாரத்திற்குள் அவகாசம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்காக நான்கு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம் 51 மில்லியன் ரூபா நிதியுதவி
பேருவளை - பன்னில பகுதியில் 140 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!
பத்திரிகை செய்திகளுக்காக அன்றி சமூக பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை இறுக்கமாக முன்னெடுங்கள் – சமூக ஆர்வ...
|
|
|


