பல்கலைக்கழக மாணவர்களிடம் உதவி கோரல்!
Saturday, December 31st, 2016போதைப் பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்காக பல்கலைக்கழக மாணவர்களின் உதவி கோரப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் முதற் கட்டமாக கம்பஹா மாவட்ட பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.
மேலும், 3 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு கம்பஹா மாவட்டச் செயலகத்தில் தலைமைத்துவப் பயிற்சியின் கீழ் இந்த விடயம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.
எதிர்வரும் கல்வியாண்டுகளில் பல்கலைக்கழகங்களுக்குள் பிரவேசிக்கும் மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு விடயங்கள் தொடர்பாக விசேட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதியின் விசேட படையணி செயலகம் தெரிவித்துள்ளது.
Related posts:
சுகாதார அமைச்சின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
முறிகண்டியில் தடம்புரண்டது அரச பேருந்து !
ஐ.நா பொதுச் செயலாளர் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விசேட சந்திப்பு - உள்ளகப் பொறிமுறையூடாகப் பிரச்சினைக...
|
|