நாட்டில் சிறந்த இளைஞர் தலைமுறையை கட்டியெழுப்பவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி!

Sunday, March 12th, 2017

கல்வித்துறையில் தேர்ச்சிபெற்ற தன்னம்பிக்கையுள்ள சிறந்த இளைஞர் தலைமுறையை நாட்டில் கட்டியெழுப்பவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்..

இதற்குத் தேவையான வழிகாட்டலை தற்போது அரசாங்கம் மேற்கொண்டுவருவதாகக் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் இளைஞர் தலைமுறையை கட்டியெழுப்புவதற்கான அனைத்து பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளார்..

பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற ‘எழுச்சிபெறும் பொலன்னறுவை இளைஞர் சக்தி’ என்ற இளைஞர் முகாமின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு வினைத்திறன் மிக்க வகையில் பங்களிக்கக்கூடிய தலைமைத்துவப் பண்புகள் மற்றும் ஆளுமைப் பண்புகளைக் கொண்ட இளைஞர் தலைமுறையை உருவாக்கும் நோக்கில் ஜனாதிபதியின் எண்ணக்கருவின் படி இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் இளைஞர் முகாம் தொடரின் முதலாவது நிகழ்ச்சித்திட்டம் இதுவாகும். இந்த முகாம் மார்ச் மாதம் 10,11,12 ஆகிய திகதிகளில் பொலன்னறுவை றோயல் கல்லூரியில் நடைபெறுகிறது.

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் ஒரு மாவட்டத்தை மையமாகக்கொண்டு அதிகளவு இளைஞர், யுவதிகளின் பங்குபற்றுகையுடன் இவ்வாறானதொரு மூன்று நாள் இளைஞர் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும் என்று ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts: