யாழ் மாவட்டத்தை முடக்குவது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை – யாழ்.மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Tuesday, April 27th, 2021

தற்போதைய நிலையில் யாழ் மாவட்டத்தை முடக்கும் தீர்மானம் இல்லை என யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

இத தொடர்பில் மாவட்ட செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது  –

தொடர்ச்சியான எழு மாற்றான பி.சி.ஆர் பரிசோதனைகளின் பிரகாரம் நேற்றைய தினம் 13 பேருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது. அந்த வகையிலே ஒக்டோபர் மாதத்திற்குப் பிறகு 1,201 பேருக்கு யாழ்மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 708 நபர்கள் பூரண சுகமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.   இன்று வரை 19 கொரோனா மரணங்கள் யாழ்மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. நேற்றுவரை ஆயிரத்து 253 குடும்பங்களைச் சேர்ந்த 3416 நபர்களை சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜனவரி மாதத்திற்கு பின்னர் சுமார் 1523 சுயதனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் உணவுப் பொதிகளை வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 15 .23 மில்லியன் ரூபா இன்றுவரை இந்த வருடம் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 491 குடும்பங்களுக்கான நிதிக்கான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த நிதி கிடைத்தவுடன் அவர்களுக்கும் அந்தநிதி வழங்கப்படும்.  

இந்த நிலையில் தற்போது புதிய சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் அரச தனியார் துறை நிறுவனங்கள் அனைவரும் புதிய நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும்.  

வழிபாட்டு இடங்களில் 50 பேருக்கு மாத்திரமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் யாழ்ப்பாண மாவட்டத்திலே வழிபாட்டு இடங்களில் இந்த நடைமுறையினை பொதுமக்கள் அனுசரித்துச் செல்லவில்லை என அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த அலட்சியத்தை விடுத்து சுகாதார நடை முறைகளை அலட்சியம் செய்யாது செயற்பட வேண்டும்.  பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆலயங்களில் 50 பேருக்கு மேற்பட்ட ஒன்றுகூடல்களை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இந்த விடயங்களை ஆலய பரிபாலன சபை மற்றும் ஆலய நிர்வாகத்தினர் கண்காணித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  வழிபாட்டு இடங்களில் இறுக்கமான நடைமுறையினை பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: