அளவெட்டியில் கூரிய ஆயுதங்களுடன் மூவர் கைது!

Tuesday, December 12th, 2017

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளவெட்டி பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் சிலர் பயணிப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று இரவு 7 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, மோட்டார் சைக்கிள்களில் பயணித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் பயணித்த மேலும் மூவர் தப்பியோடியுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து கத்தி மற்றும் பொல்லுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தர்ப்பத்தில் மேலும் மூவர் தலைமறைவாகியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் அளவெட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன், 27 மற்றும் 22 வயதானவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts:

பெண்கள் மட்டுமே பயணிக்கும் வகையில், புகையிரதங்களில் பெட்டி ஒதுக்க நடவடிககை - அமைச்சர் காமினி லொக்கு ...
பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்கள் இறுக்கமாக பின்பற்றப்பட வேண்டும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத...
நாட்டில் 3 இலட்சம் சிறார்கள் பாதுகாப்பற்ற முறையில் வாழ்கின்றனர் - நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்...