அறுவைச் சிகிச்சைக்காக தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட பெண் திடீரென உயிரிழப்பு!
Saturday, December 24th, 2016வயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக அந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் இன்று (24) அதிகாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெவில் பெர்ணான்டோ தனியார் மருத்துவமனையில் வயிற்றில் அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்திய பின்னர் இவ்வாறு உயிழந்துள்ளவர் தெல்கொட அஹகம்மன பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான பெண் ஆவார். அவர் கடந்த 20 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்இ இந்த மரணம் சந்தேகத்திற்கு உரியது என உயிரிழந்துள்ள பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு!
பனைவிதை நடுகையும், கருத்தாடலுக்குமான அழைப்பு!
20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக இதுவரை 12 மனுக்கள் தாக்கல்!
|
|