விசர் நாய் கடி நோயினை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை!

Monday, August 28th, 2017

2020ஆம் ஆண்டளவில், கொழும்பு நகரில் விசர் நாய் கடி நோயினை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான மிருக மருத்துவர் விபுல தர்மவர்தன தெரிவித்துள்ளார்

கடந்த காலங்களில் இந்த நோய்யை கட்டுப்படுத்துவதற்காக இரு சுகாதார பணியாளர்கள் மட்டுமே சேவையில் இருந்தன தற்போது இந்த எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

உலக சுகாதார ஸ்தாபனத்தின் நியமங்களுக்கு அமைய கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் உள்ள கட்டாக்காலி நாய்களில் 80 சத வீதமானவற்றிற்கு, இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படும் பட்சத்தில், இந்த நோயை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts: