அமரர் யேசுதாசன் அமினதாப்பின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!

Wednesday, November 30th, 2016

நேற்று முன்தினம் நாவற்குழி புகையிரத பாலத்தின் கீழ் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த யேசுதாசன் அமினதாபின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளது.

நாவற்குழி 300 வீட்டுத்திட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகப் பொருளாளர் பூ.குணசிங்கம் (வசந்தன்) கட்சியின் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் கட்சியின் சாவகச்சேரி பிரதேச முக்கியஸ்தர்களான மூர்த்தி மாஸ்ரர் மற்றும் சுஜீவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன்  அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

காலஞ்சென்ற யேசுதாசன் அமினதாப் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் இருதயராணி அவர்களது பெறாமகனான என்பது குறிப்பிடத்தக்கது.

6

4

7

5

3

8

Related posts: