கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம் -03 வருடங்களுக்குள் நிறைவடையமெனவும் தெரிவிப்பு!
Wednesday, November 9th, 2022கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்று புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளன.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் தலைமையில் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
03 வருடங்களுக்குள் மேற்கு முனைய நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக இந்தியாவின் அதானி குழுமம் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விஜயகலாவின் புலிக்கதையால் நாடாளுமன்றத்தில் சலசலப்பு!
மின்சார வசதியற்ற வீடுகளுக்கு இந்த வருடத்திற்குள் மின்சாரம் - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதி!
சினோபார்ம் தடுப்பூசியை நான்காவது தடுப்பூசியாக பயன்படுத்த தீர்மானம் - சுகாதார அமைச்சு தீர்மானம்!
|
|