அனைத்து தரப்பினரதும் பங்களிப்பு மிக அவசியம் – இராஜாங்க அமைச்சர் டிலான்!

Saturday, November 11th, 2017

நாடு பிளவுபடுவதை தடுக்க வேண்டுமாயின் புதிய அரசியல் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்..

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் அனைத்து தரப்பினரதும் பங்களிப்பு மிக அவசியம் என்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

அரசியல் அமைப்பு அறிக்கையிடும் குழுவிற்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அதன் மூலம் பாராளுமன்ற ஜனநாயகம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டார்

Related posts: