அதிபர் வெற்றிடத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
Tuesday, August 9th, 2016யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு, யாழ். கல்வி வலயத்தில் அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
யாழ் வலையக் கல்விப் பணிப்பாளர் என்.தெய்வேந்திரராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சென் ஜேம்ஸ் வித்தியாலயம் (வகை-2), நாவாந்துறை றோ. க. வித்தியாலயம் (வகை-2), கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம் (வகை-2), கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலயம் (வகை-2), கொழும்புத் துறை சென். ஜோசப் வித்தியாலயம் (வகை-02), சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை (வகை-3), கொக்குவில் மேற்கு சீ.சீ.த. க பாடசாலை (வகை-03) ஆகிய பாடசாலைகளுக்கே இவ்வாறு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பப் படிவங்களை யாழ். கல்வி வலயத்தின் பொது நிர்வாகக் கிளையில் பெற்றுப் பூர்த்தி செய்து எதிர்வரும்-15-08-2016ம் திகதிக்கு முன்னர் வலயக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு, தெய்வேந்திரராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பரீட்சைக்கு முன்பாகவே வெளியானது வினாத்தாள் - விசாரணையை ஆரம்பித்தது வடக்குக் கல்வித் திணைக்களம்!
தமிழில் தேசிய கீதம் பாடுவது சிறந்ததே - பிரதமர்!
மட்டுவில் சிவன் கோவில் வீதியில் வாளுடன் இருவர் கைது!
|
|