அடிப்படைச் சிங்களக் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Friday, May 26th, 2017

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் ஆரம்ப மற்றும் அடிப்படைச் சிங்களக் கற்கை நெறிக்குப் புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

சனி அல்லது ஞாயிறு தினங்களில் வாரத்தில் மூன்று மணித்தியாலங்கள் குறித்த கற்கை நெறி இடம்பெறும். பதினெட்டு அல்லது பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் குறித்த கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்தக் கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரிகள் எதிர்வரும்-30 ஆம் திகதி வரை WWW.au.lk எனும் இணையத்தளத்தில் பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்க முடியும்.

Related posts: