டக்ளஸ் எம்.பி தலைமையில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஆதரவுப் பிரசார கூட்டம்!

Monday, October 14th, 2019

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் ஆதரவுப் பிரசார கூட்டம் இன்றையதினம் நடைபெறவுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் இன்றையதினம் இருவேறு பிரதேசங்களில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபயவுக்கு ஆதரவுப்பலத்தை வழங்கும் முகமாக இப்பிரசார கூட்டங்கள் நடைபெறவுள்ளது.

இதனடிப்படையில் முதலாவது ஆதரவு பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் இன்றையதினம் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

இரண்டாவது ஆதரவு பிரசாரக் கூட்டம் பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் இன்று பிற்பகல் 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த இரு ஆதரவு பிரசார கூட்டங்களிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராயபக்ச அவர்களது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராயபக்ச கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே காங்கேசன்துறை வீதி, கோண்டாவில் மேற்கு உப்புமடச்சந்தி வேதபாராயண சனசமூக நிலையத்திலும் பிற்பகல் 4.30 மணிக்கு மற்றுமொரு ஆதரவு பிரசார கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தொழிற்துறைகளை செயற்படுத்துவதன் மூலம் முல்லைதீவு மாவட்ட வறுமையைப் போக்க இயலும்! - டக்ளஸ் தேவானந்தா
பனங் கள் உற்பத்தியானது 20 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரமாகும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெர...
வடக்கு கிழக்கில் காணப்படும் காணி பிரச்சினைக்கு பாதீட்டின் மூலம் விரைவில் தீர்வு கிடைக்கும் - நம்பிக்...