புதிய கடற்றொழில் வரைபு ஒரு மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – உலக உணவு மற்றும் விவசாய அமைப்பிடம் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Thursday, February 22nd, 2024

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஐ.நா. உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பிரதி பணிப்பாளர் நாயகம் மனுவேல் பராங்கே தலைமையிலான பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று கடற்றொழில் அமைச்சில் இன்று (21.02.2024) இடம்பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் –

இலங்கை கடற்றொழில் சமூகத்தை சர்வதேச மட்டத்தில் உயர்த்துவதற்காக FAO அமைப்பின் உதவியுடன் உருவாக்கப்பட்டு வரும் தற்போது வரைபு மட்டத்திலுள்ள புதிய கடற்றொழில் சட்டத்தை ஒரு மாதத்திற்குள் கடற்றொழிலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் கருத்துக்களை உள்வாங்கி அமைச்சரவையின் அனுமதியுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென தெரிவித்தார். இச் சட்டத்தை தயாரிப்பதற்கு FAOதரப்பில் வழங்கப்பட்ட உதவிகளுக்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் இலங்கை கடற்றொழில்துறையை அபிவிருத்தி செய்வதற்கும்எமது அறுவடைக்குப் பின்னரான பதிப்புகளை தடுப்பதற்கும்எது நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் FAO அமைப்பின் உதவி மற்றும் ஆலோசனை தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர்குறிப்பாக எதிர்காலத்தில் மீன்வளம் அழிவடையும் அபாயம் இருப்பதால் கூடுகளில் மீன்களை வளர்ப்பதற்கான உதவிகளை செய்து தருமாறும்இது உலகெங்கும் நடைமுறையில் உள்ள விடயம் என்பதால் மோதா போன்ற மீன் இனங்களை வளர்ப்பதற்கு உதவி பரியுமாறும் FAOபிரதிநிதிகளிடம் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் நடவடிக்கைகள் காரணமாக இலங்கை மீனவர்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர்தற்போது எமது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினைகளில் இருந்து மீட்சிபெறும் வரை கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இதன் போது FAO பிரதி பணிப்பாளர் நாயகம் மனுவேல் பராங்கே கருத்து தெரிவிக்கையில்

அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிககைள் தொடர்பாக தமது அமைப்பு சாதகமாக பரிசீலிக்குமெனவும்இலங்கை கடற்றொழிலளார்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது தெடர்பில் தமது அமைப்பு சாதகமாக பரிசீலனை செய்யுமெனவும்புதிய கடற்றொழில் வரைபை உருவாக்குவதற்கு கடற்றொழில் அமைச்சர்அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகள் வழங்கிய அரப்பணிப்பை தாம் பெரிதும் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

இச் சந்திப்பில்கடற்றொழில் அமைச்சின் செயலாளர் நயனா குமாரி சோமரத்னFAO அமைப்பின் இலங்கை வதிவிடப் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

000

Related posts: