தோழர் சந்திரமோகனது பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி!

Friday, July 8th, 2016

அமரர் நாராயணலிங்கம் சந்திரமோகனின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தியும் மலர்மாலை அணிவித்தும் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

கொழும்பு பொரளை ஜெயரட்ணம் மலர்சாலையில் அன்னாரது பூதவுடல் மக்களது இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் பூதவுடவுக்கு அரசில் பிரமுகர்களும் மக்களும் தமது இறுதி அஞ்சலியை செலுத்திவருகின்றனர்.

தோழர் சந்திரமோகனின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மலர்ச்சாலைக்கு வருகைதந்திருந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அன்னாரது பூதவுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தியும் மலர்மாலை அணிவித்தும் தமது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

அத்துடன் கட்சியின் ஏனைய தோழர்கள் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் பிரபாகணேசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் தமது இறுதி அஞ்சலிகளை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய டக்ளஸ் தேவானந்தா அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கம் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

கடந்த 5ஆம் திகதி காலமான அமரர் நாராயணலிங்கம் சந்திரமோகனின் பூதவுடல் மக்களது இறுதி அஞ்சலியை தொடர்ந்து இன்றுமாலை 4 மணிக்கு கனத்தை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

DD

1 dd

3dd

2dd

267d5e03-bbea-44e3-b0f9-a534486e2023

v

Related posts: