இலங்கை – இந்திய எல்லை தாண்டிய கடற்றொழிலாளர் விவகாரம்: இருநாட்டு கடற்றொழிலாளர்களது நலன்களும் பாதுகாக்கும் வகையில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Sunday, December 8th, 2019


இலங்கை மற்றும் இந்திய கடல்தொழிலாளர்கள் இடையே நடைபெற்றுவந்த நிலையில் இடை நிறுத்தப்பட்ட பேச்சுக்கள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டு இருநாட்டு கடல்தொழிலாளர்களும்  எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண விரைவில் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கடல் தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்புன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கலையில் –

நீண்டகாலமாக தீர்வுகள் காணப்படாது இருந்துவரும் குறித்த கடல் தொழில்சார் தொழிலாளர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதற்காக கடந்த காலங்களிலும் நான் கடல்தொழில் அமைச்சராக இல்லாது விடினும் இருநாட்டு கடல் தொழிலாளர்களது பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என பல முயற்சிகளை நான் மேற்கொண்டிருந்துள்ளேன்.

தற்போது எனக்கு இலங்கை நாட்டின் அமைச்சரவை அந்தஸ்துள்ள பெரும் அமைச்சானா கடல்தொழல் மற்றும் நீரியல் வள மூலதன அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சைக் கொண்டு நான் முடியுமான அளவு இலங்கை இந்திய மீனவர்களுக்கு நன்மை தரும் வகையில் தீர்வுகாண ஈயற்சிகளை மேற்கொள்ளவுள்ளேன.

அந்தவகையில் வரும் ஆண்டு முற்பகுதியில் இருநாட்டு துறைசார் தரப்பினருடனும் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளேன். அதற்கான முயற்சிகள் தற்போது நடைபெறுகின்றது. அத்துடன் இந்திய நாட்டு மீனவர்கள் தடைசெய்யப்பட்ட கடல் தொழில் உபகரணங்கள் பாவிப்பதை விடுவிக்க வேண்டும் என்பதுடன் கடல் சார் உயிரினங்களின் பாதுகாப்பையும் இருநாட்டு கடல் தொழிலாளர்களும் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் இருநாட்டு கடற்படையினரால் பறிமுதல் செய்யப்ட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிப்பது தொடர்பிலும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளேன் என்றார்.

Related posts:

சமூக வலைத்தளங்கள் மக்களுக்கு சரியான கருத்துக்களை எடுத்துச் செல்ல வேண்டும் - செயலாளர் நாயகம் சுட்டிக்...
சஜித் பிரேமதாஸாவின் கருத்து கடந்த ஆட்சியின் தவறை மறைக்கும் முயற்சியென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்...
கருவாடு உற்பத்திகளை உள்நாட்டில் அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்துவது தொடர்பி...

வடக்கில் புனரமைக்கப்படாதுள்ள மீன்பிடித் துறைமுகங்களின் புனரமைப்பு தொடர்பில் விரைவான நடவடிக்கைள் மேற்...
தெற்கு மக்களின் மனிதநேயம் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப பெரிதும் உதவும் – டக்ளஸ் எம்.பி. நம்பிக்க...
பொலிஸ் அதிகாரத்தை பறிக்கும் முயற்சிகளை ஈ.பி.டி.பி. எதிர்க்கும் - அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!