பாசையூர் புனித அந்தோனியர் கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளுக்கு தீர்வுவழங்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, March 30th, 2024


பாசையூர் புனித அந்தோனியர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்தி தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சரின் யாழ் அலுவலகத்திற்கு இன்று முற்பகல் (30.03.2024)வருகைதந்த குறித்த சங்கத்தின் தலைவர், பொருலாளர், செயலாளர் ஆகியோரே இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்போது அவர்கள் தெரிவிக்கையில் – 

தமது பகுதி தொழில் நடவடிக்கைகளை இலகுபடுத்தும் வகையில் எரிபொருள் நிரப்பு நிலையம்  ஒன்று அமைக்கப்படவேண்டுயது அவசியமாக உள்ளது.

அதேபோன்று களங்கண்டி வலைகுத்தும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடிகள் பெற்றுக்கொள்வதும் பிரச்சினையாக இருக்கின்றது.

எனவே நாம் எதிர்கொள்ளும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு கோருகின்றோம்.

அதுமடுமல்லாது இப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதார நிலைமைகளை மேம்படுத்தவதற்கான உபகரணங்களையும் பெற்றுத்தருமாறும் கோரியுள்ளனர்

குறித்த சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் அது தொடர்பில்    நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts:

எம்மீது சுமத்தப்பட்டுவந்த பழிகளுக்கு பதில்களை காலத்திடம் ஒப்படைத்தோம். காலம் எம்மை ஏமாற்றிவிடவில்லை ...
பிரச்சினையை தீராப் பிரச்சினையாக்கவே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன - இதுவும் சுமந்திரனின் நடிப்பில் ...
சவால்களை எதிர்கொள்ளும் யாழ் மாவட்ட விளையாட்டுத்துறை - துறைசார் வல்லுனர்களுடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய...

இலங்கை உயர்கல்வி முறைமை பல்லாயிரக்கணக்கான இளைஞ ர்களுக்கு துரோகம் இழைக்கி ன்றது - நாடாளுமன்றில் டக்ளஸ...
சுபீட்சமாக வாழும் மகிழ் காலத்தை வென்றெடுப்போம் - பொங்கல் வாழ்த்தில் அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!
செம்மணியில் சர்வதேச தரத்திலான இரு மைதானங்கள் – அமைவிடம் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் ஆராய்வு!