வெடுக்குநாரிமலை ஆதிகோணேஸ்வரர் ஆலயத்தை பாதுகாக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Saturday, December 1st, 2018தொன்மைவாய்ந்த வெடுக்குநாரிமலை ஆதி கோணேஸ்வரர் ஆலயத்தை புனரமைப்பதுடன் அங்கே மகா சிவராத்திரியை அனுஷ்டிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துவருவது தொடர்பாக வேந்தர் சி. பத்மநாதன் மற்றும் இந்துமத திணைக்களப் பணிப்பாளர் உமாமகேஸ்வரன் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
இன்று (01.12.2018) அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல்களில், வெடுக்குநாரிமலை ஆதிகோணேஸ்வரர் ஆலயத்தின் தொண்மையை பாதுகாக்கவும் அங்கே அடியார்களுக்கு வசதியாக படிக்கட்டுக்கள் அமைத்தல், பாதையை சீரமைத்தல், குழாய் கிணறுகளை அமைத்தல் என்பவற்றைச் செய்து சிவராத்திரி பூஜைகள் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்வதுடன் தொல்பொருள் திணைக்களத்தின் தேவையற்ற தலையீடுகளை தவிர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
Related posts:
தேசிய மொழிக் கொள்கையில் தமிழ் மொழியின் வகிபங்கும் அவசியம் – டக்ளஸ் தேவானந்தா!
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட்டு பரிகாரங்கள் பெற்றுக்கொடுக்க விரைவில் நடவட...
கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 383 பேருக்கான இழப்பீட்டு காசோலைகளை வழங்கிவைதார் அமைச்சர் டக்ளஸ...
|
|