வெடுக்குநாரிமலை ஆதிகோணேஸ்வரர் ஆலயத்தை பாதுகாக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 1st, 2018

தொன்மைவாய்ந்த வெடுக்குநாரிமலை ஆதி கோணேஸ்வரர் ஆலயத்தை புனரமைப்பதுடன் அங்கே மகா சிவராத்திரியை அனுஷ்டிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துவருவது தொடர்பாக வேந்தர் சி. பத்மநாதன் மற்றும் இந்துமத திணைக்களப் பணிப்பாளர் உமாமகேஸ்வரன் ஆகியோருடன் கலந்துரையாடினார்.

இன்று (01.12.2018) அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல்களில், வெடுக்குநாரிமலை ஆதிகோணேஸ்வரர் ஆலயத்தின் தொண்மையை பாதுகாக்கவும் அங்கே அடியார்களுக்கு வசதியாக படிக்கட்டுக்கள் அமைத்தல், பாதையை சீரமைத்தல், குழாய் கிணறுகளை அமைத்தல் என்பவற்றைச் செய்து சிவராத்திரி பூஜைகள் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்வதுடன் தொல்பொருள் திணைக்களத்தின் தேவையற்ற தலையீடுகளை தவிர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

4T2A0043 4T2A0029

47092016_930825210420995_843264331184340992_n 47212619_297727924283221_4655674562371911680_n

Related posts: