விடுமுறை தினத்தில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம்!

Sunday, June 11th, 2023

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு இன்று(11.06.2023) விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிறுவனத்தின் செயற்பாடுகளை ஆராய்ந்தார்.

குறிப்பாக, தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள, இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றிற்கு சொந்தமான கப்பல் நங்கூரமிடும் தளம் உட்பட்ட காணி தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை கையாளவது தொடர்பாகவும், குறித்த திணைக்களங்களுக்கு சொந்தமான சம்மந்தப்பட்ட பகுதியினை வினைத் திறனாக பயன்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். – 11.06.2023

Related posts:


தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது பொய்முகங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்...
எமக்கான தீர்வுகளை பெற்றுத்தரும் வல்லமை உங்களிடமே உள்ளது : டக்ளஸ் தேவானந்தாவிடம் நாவாந்துறை மக்கள் சு...
ஜனாதிபதி ரணிலின் வெற்றி - தமிழ் மக்கள் விரைவில் கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்கால...