நிலையற்றதொரு ஆட்சியின் பிரதிபலிப்புகளை இந்த நாட்டு மக்கள் வீதிகளில் அனுபவிக்கின்றனர் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, September 18th, 2019


இன்று இந்த நாட்டிலே மீண்டும் பொது மக்களது இயல்பு வாழ்வினைச் சீர்குலைக்கின்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற ஆரம்பித்துள்ளன.

ஒரு பக்கத்திலே இலங்கைப் போக்குவரத்துச் சபை சார்ந்த பணி பகிஸ்கரிப்புகள், இன்னொரு பக்கத்திலே அரச மருத்துவர்களது பணிப் பகிஸ்கரிப்புகள் என மக்களின் இயல்பு வாழ்விற்குக் கேள்விக் குறிகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நாட்டின் நிலையற்றதொரு ஆட்சியின் பிரதிபலிப்புகளை இந்த நாட்டு மக்களில் இன்று கண்கூடாகவே காணக்கூடியதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற வணிகக் கப்பற்றொழில் திருத்தச் சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயெ அவர்’ இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த நிலையில் வாணிபக் கப்பற்றொழில் தொடர்பில் நாங்கள் வாத, விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

எமது கடல் மார்க்க வாணிபப் பாதையைப் பொறுத்த வரையில் தென் சீனாவிலிருந்து புருனை, தாய்லாந்து, மலக்கா, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன், ஈரான் என விரிந்து செல்கின்றது.

இவ்வாறு தென் சீனாவில் ஆரம்பிக்கின்ற இப்பாதையானது மலக்கா கடல் பாதை தாண்டி இந்து சமுத்திரத்தின் ஊடாக மாந்தோட்டை எனப்படுகின்ற மாந்தை துறைமுகத்தை அடைவதாகக் கூறப்படுகின்ற நிலையில், இந்த மாந்தோட்டை அல்லது மாந்தை எனப்படும் பகுதியானது மன்னாருக்கு நேர்ப்புறமாக அமைந்துள்ளதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பண்டைய காலத்தைப் பொறுத்தமட்டில் அக்காலகட்டத்து கப்பல்கள் இடைநடுவில் நங்கூரமிட்டுத் தரித்து நின்ற இரு முக்கிய துறைமுகங்கள் இந்த நாட்டில் இருந்துள்ளன எனத் தெரிய வருகின்றது. அதில் ஒன்று திருகோணமலை. மற்றது கொடவாய என்பதாகும். இந்தக் கொடவாய துறைமுகம் தென் பகுதியிலே அம்பாந்தோட்டைப் பகுதியிலே அமைந்திருந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்த விடயங்களை வைத்துப் பார்க்கின்றபோது வணிகக் கப்பற்துறையைப் பொறுத்தமட்டில் எமது நாட்டுக்கு மிக இலகுவான துறைமுகங்களாக மாந்தை, கொடவாய மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் காணப்படுகின்றன. இதிலே, மாந்தை துறைமுகத்தின் தற்போதைய நிலைமைகள் சரிவரத் தெரிய வராவிட்டாலும், கொடவாய துறைமுகத்திற்குப் பதிலாகத் தற்போது அம்பாந்தோடடடைத் துறைமுகம் அமையப் பெற்றிருக்கின்றது.

அந்த வகையில் தற்போதைய நிலையில் வாணிப கப்பற்துறையைப் பொறுத்தவரையில், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் மிக முக்கிய துறைமுகங்களாகக் காணப்படுகின்றன.

Related posts:


வடக்கின் அபிவிருத்தி குறித்து என்னிடம் கேள்வி கேட்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எவருக்கும் அருகத...
யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு நியாய விலையில் விதை வெங்காயம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியு...
வடக்கு – கிழக்கில் ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கான தலைவர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்?...