வடக்கு கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு: ஆட்சி ஏறியவுடன் 30 ஆயிரம் பேருக்கு நியமனம் – கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, October 28th, 2019


இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வருகைதந்திருந்தபோது ஶ்ரீலங்கா பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச அவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பலவற்றுக்கு டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் முன்வைக்கப்பட்ட வடக்கு கிழக்கில் வாழும் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்ததுடன் அதன் முதற்கட்டமாக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் உடனடியாக 30 ஆயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஏனையோருக்கும் விரைவாக தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ். பல்கலைக்கழக மாணவர்களது நடைபயணம் வெற்றியளிக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா எம்.பி.தெரிவிப்பு!
தென்மராட்சி பிரதேச பொது அமைப்புகளுக்கான உதவித்திட்டங்களை  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கையளிப்பு...
நல்லாட்சி அரசு அரசியலுக்காக எங்களை பாவித்துவிட்டு ஏமாற்றிவிட்டது - டெங்கு ஒளிப்பு உத்தியோகத்தர்கள் ...