தீவகத்தில் கடலட்டை வளர்ப்பு தொடர்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Thursday, October 18th, 2018

தீவகப் பகுதியில் கடலட்டை வளர்ப்பில் ஈடுபட விரும்பும் துறைசார் தொழிலாளர்களுக்கான விசேட செயலமர்வு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற குறித்த செயலமர்வின்போது அனலைதீவு, நயினாதீவு, ஊர்காவற்றுறை, வேலணை போன்ற பகுதிகளில் கடலட்டை வளர்ப்பதில் உள்ள சாதக பாதகங்கள் தொடர்பில் தேசிய நீர்வாழ் உயிரின அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் நிருபராஜ் விளக்கமளித்துள்ளார்.

இதன்போது குறித்த கடலட்டை வளர்ப்பு அதன் அறுவடை தொடர்பிலும் சந்தைப்படுத்தல் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டதுடன் அத்துறையை மேற்கொள்ளவுள்ள தொழில் துறைசார் தரப்பினர் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

IMG_20181018_095216 - Copy

Related posts:

மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் தொடர்பில் விரைவான நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
தெரிவு சரியானதாக அமையுமாயின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் உருவாகும்அமைச்சர்...
வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் - ஜனவரி முதல் வாரத்தில் ஜனாதிபதியின் வடக்கிற்க...