வவுனியா மாவட்ட செயற்பாட்டாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!
Tuesday, July 30th, 2019ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட செயற்பாட்டாளர்களை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பு வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதி மண்டபத்தில் இடம்பபெற்றது.
இதன்போது கட்சியின் எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள், கட்சியினால் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள், நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த பிரதேச பொது மக்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன், கட்சியின் பிரமுகர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எமது மக்களது பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.வலியுறுத்து!
அமைச்சர் டக்ளஸின் காலம் எமக்கான நேரம் - பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்றது வடமாராட்சி!
அக்கராயன் ஏற்றுநீர்பாசனத் திட்டத்தை இயந்திரங்களைப் பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் – மின்சார இணைப்பின...
|
|