வவுனியா மாவட்ட செயற்பாட்டாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட செயற்பாட்டாளர்களை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பு வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதி மண்டபத்தில் இடம்பபெற்றது.
இதன்போது கட்சியின் எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள், கட்சியினால் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள், நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த பிரதேச பொது மக்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன், கட்சியின் பிரமுகர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிந்தமை குறிப்பிடத்தக்கது.



Related posts:
வடக்கில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கு அமைக்கப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வல...
படிப்பினைகள் பாடமாகாவிட்டால் நல்லிணக்கம் சாதியம் ஆகாது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்கா...
கூட்டமைப்பினரால் அதிகாரப் பரவலாக்கக்தை கொண்டுவர முடியாமற் போனது ஏன்? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!
|
|