வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆராய்வு!

Thursday, April 22nd, 2021

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தலைமையில் கடற்றொழில் அமைச்சிற்கு வருகை தந்த வவுனியா மாவட்ட ஈ.பி.டி.பி. கட்சியின் செயற்பாட்டாளர்கள், ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பு இன்று காலை கொழும்பிலுள்ள அமைச்ரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வவுனியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள கட்சி மாநாடு தொடர்பாகவும், மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: