வழங்கப்படும் பயன்கள் அனைத்தும் மக்களுக்கு உச்சபட்சமாக கிடைக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, March 23rd, 2024

நான் என்றும் சுயநலத்துக்காகவோ அல்லது அரசியல் நோக்கத்துக்காக எவரையும் வற்புறுத்துவதோ திணிப்பதோ கிடையாது. அதுமட்டுமல்லாது அவ்வாறான நிலையிலிருந்து மக்கள் பணிகளை செய்வதை விரும்புவதும் கிடையாது மாறாக அனைத்தும் மக்களுக்கும் வழங்கப்படும் பயன்கள் உச்சபட்சமாக கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாடிலிருந்துதான் செயற்படுகின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட நிதி ஒதுக்கீட்டில் முன்மொழியப்பட்டு  நடைமுறைப்படுத்தப்படவுள்ள முன்மொழிவுகள் தொடரில் ஆராயும் முன்னாயத்தக் கூட்டம் இன்றையதினம் யாழ் கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில் –

மக்களுக்காக கடைக்கின்ற நிதிகளை திட்டங்களாக நடைமுறைப்படுத்துவதை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இக்கூட்டம் நடைபெறுகின்றது.

இதேவேளை அரச கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய வடக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி விசேட நிதி ஒன்றை  வழங்க முன்வந்துள்ளார்.

அந்த வகையில் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை மக்களுக்கானதாக பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.

இது திணிப்போ அல்லது அரசியல் நோக்குடையதோ என்று எண்ணவேண்டாம்.  நான் என்றும் சுயநலத்துக்காக அல்லது அரசியல் நோக்கத்துக்காக எவரையும் வற்புறுத்துவதோ திணிப்பதோ கிடையாது. மாறாக அரசியல் இலபத்துக்காக செயற்றிட்டங்களையும் முன்னெடுப்பதையும் விரும்புவதில்லை.

அனைத்தும் மக்களுக்கும் பயன்கள் உச்சபட்சமாக கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாடிலிருந்துதான்  இவற்றை பார்க்கப்பட வேண்டும்.

கடந்த 3 வருடங்களாக பன்முகப்படுத்தப்பட்ட நிதி கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அது 320 மில்லியனாக எமது மாவட்டத்திற்கு  கிடைத்துள்ளது.

அந்தவகையில் கிடைதுதுள்ள இந்த நிதியூடாக மக்களுக்கு உச்சபட்சமான பலனை கிடைக்க செய்வதே எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும் என்றுமு; தெரிவித்திருந்தார்

குறித்த இந்த கூட்டத்தில் யாழ் மாவட்ட பதில் அரச அதிபர், யாழ் மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர், சமுர்த்தி உதவி ஆணையாளர், பிரதேச செயலர்கள் பிரதேச சபைகளின் செயலாளர்கள் துறைசார் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

தபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல பரிச்சயம் கொண்டவர்களை ஏன் நியமிக்க முடியாது? நாடாளுமன்றில் டக்ளஸ...
அரசியல் தலையீடு என்பது எந்தவொரு விடயத்திற்கும் அவசியம் – ஆனால் அது தூய்மையானதாக இருக்க வேண்டும் என்ப...
வடக்கின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

தண்ணீர் பவுஸர்களுக்கும், பால் பௌஸர்களுக்கும்  இறக்குமதி வரிச்சலுகை கொடுக்க வேண்டும் - நாடாளுமன்றில் ...
வடக்கு - கிழக்கு பட்டதாரிகளுக்கு இன விகிதாசார அடிப்படையில் அரச தொழில்வாய்ப்பு வேண்டும் - பிரதமரிடம் ...
கடற்றொழில்சார் மக்களின் வாழ்வியலை பாதுகாத்து வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு - பிரச்சினை...