வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத்தலங்களுக்கு பத்து இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகளை வழங்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத் தலங்களான கீரிமலை நகுலேஸ்வரர் தேவஸ்தானம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் ஆகியற்றுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைக்கவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்திற்கு அமைய, பௌத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் மேற்குறித்த இரண்டு ஆலயங்களுக்கும் தலா பத்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வடக்கிற்கான தனது பிரதிநிதி என்று அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சீனத் தூதுவருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பிரதமரினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியுதவியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் வழங்கி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பத்தினிபுரம் கிராம மக்களது மயான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் தேவானந்தா!
மாகாணசபைத் தேர்தல் எந்த முறையில் நடந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்ச...
ஆட்சியில் பங்கெடுத்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்னரைவிடவும் கடும...
|
|
மக்களுக்கு பாதகம் ஏற்படும் செயற்றிட்டங்களை யார் முன்னெடுத்தாலும் அதற்கு நாம் ஒருபோதும் துணைபோக மாட்ட...
கிளிநொச்சி பிறம்மந்தனாறு கிராமத்தில் சமுர்த்தி உற்பத்தி கிராமதை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார் அமைச...
மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் கிறிஸ்தவ பாடநெறிக்கு தெரிவு செய்யப்பட்ட யாழ். மாவட்ட ஆசிரியர்கள் அ...