வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு – ஜனாதிபதி ரணிலுக்கு வடக்கு கடற்றொழிலாளர் சார்பில் நன்றி தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் !

Wednesday, December 20th, 2023

வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ரூபாய் வடக்கிற்கு ஒதுக்கீடு செய்யபட்டுள்ளளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய கடற்றொழில் தினத்தினை இன்று கடற்றொழில் அமைச்சினால் யாழ் மாவட்டத்தில் கொண்டாடியுள்ளனர்.

கடற்றொழில் பிரச்சினைகளுக்கு ஓரிரு வருடங்களிற்குள் தீர்வு காணமுடியும் என நான் நம்புகின்றேன் பாதீட்டில் வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு என ரூபாய் 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்காக நான் இந்த நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வடமாகாண கடற்றொழிலாளர் சார்பில் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் என தெரிவித்தார்.

000

Related posts:

பருத்தித்துறை நரசிம்மர் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் தாங்கியை டக்ளஸ் தேவானந்தா மக்களிடம்...
மக்களின் ஆணையை பெற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் - வேட்பு மனு தாக்கல் செய்தபின் டக்ளஸ் தேவானந்...
உரிமைக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் விவேகமற்ற அரசியல் தலைமைகளினால் வழிமாறிச் சென்று மக்களை கையேந்து...

மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தந்தையாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அ...
தெரிவு சரியானதாக அமையுமாயின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் உருவாகும் - அமைச...
நயினாதீவில் புதிய மின் பிறப்பாக்கி - குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!