வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்குபடுத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Thursday, March 31st, 2022

வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், வேகமாக அதிகரித்து வருகின்ற  கடலட்டைப் பண்ணைகளுக்குத் தேவையான கடலட்டை குஞ்சுகளை பெற்றுக் கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில்,

நாட்டின் தற்போயை நிலைவரங்களையும், நாட்டிற்கு தேவையான அவசர ஏற்றுமதி வருமானங்களையும் கருத்தில் கொண்டு, தற்காலிகமாக  கடலில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும், அதனடிப்படையில் கடலட்டை குஞ்சுகளை உடனடியாகப்  பெற்றுக் கொள்ளுகின்ற  அதேவேளை, நீடித்து நிலைத்த கடலட்டை வளர்ப்பிற்கு தேவையான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்களை உடனடியாக விஸ்தரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தினை சேர்ந்த மாவட்டங்களின் கடற்றொழில் திணைக்களம், நக்டா எனப்படும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகாரசபையின் ஆகியவற்றின் அதிகாரிகளும் கடலட்டைப் பண்ணை செய்கையாளர்களும் கலந்துகொண்ட இன்றைய கலந்துரையாடலில், கடலட்டை பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

000

Related posts:

யாழ்ப்பாணத்தில் படகு கட்டும் தொழிற்சாலையை அமைதற்கு தனியார் முதலீட்டாளர்கள் கோரிக்கை - ஒத்துழைப்பு வ...
முதலமைச்சர் ஸ்ராலினுக்கு புரிந்தது யதார்த்தம் - ஆதாயம் தேடுகின்றனர் சுயநல அரசியல்வாதிகள் – அமைச்சர் ...
'ஈ.பி.டி.பி.யின் புதுக்குடியிருப்பு இளைஞர் அணி' உருவாக்கம் - நிர்வாகக் கட்டமைப்பும் செயலாளர் நாயகம் ...

தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவா...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மகத்தான வரவேற்பு: ஈ.பி.டி.பியின் வழிமுறை நோக்கி வட்டுக்கோட்டையில் அண...
நொதேன் பவர் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் மீள செயல்பட அனுமதி வழங்கப்படாது – அச்சம் கொள் வேண்டாம் என அமைச்...