வடக்கின் பெரும் போர் களமுனைக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் – வீரர்களை வாழ்த்தி இரண்டாம் நாள் ஆட்டத்தையும் ஆரம்பித்துவைப்பு!

Friday, March 8th, 2024

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்தியகல்லூரி மற்றும் யாழ்.புனித பரியோவான் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்றுவரும் துடுப்பாட்ட போட்டியின் ஆட்டத்தை பாவையிட விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கபற்றும் இரு பாடசாலைகளின் மாணவர்களையும் ஊக்குவித்து வாழ்த்தியதுடன் இன்றைய இரண்டாம் நாள் போட்டிகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.

முன்பதாக வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், யாழ்.புனித பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள்களைகொண்ட 117 ஆவது கிரிக்கெட் போட்டி நேற்றையதினம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் யாழ்.மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா  இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை பாவையிட மைதானத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


போதைப் பொருள் கடத்தல்காரர்களின் விபரங்கள் காணாமல் போனதா? காணாமல் ஆக்கப்பட்டதா - நாடாளுமன்றில் டக்ளஸ்...
பாண்டிச்சேரி - காங்கேசன்துறை படகுச் சேவை எந்த நேரத்திலும் ஆரம்பிக்கப்படலாம் - அமைச்சர் டக்ளஸ் தெரிவி...
பிரதேச செயலகங்களால் கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் நேரடி தெரிவுகளாகவே முன்மொழிவு...