மண்கும்பான் கைலாசபிள்ளை வீதியை செப்பனிடுவதற்காக கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!

Thursday, April 13th, 2023

மண்கும்பான் பிரதான வீதியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் கைலாசபிள்ளை வீதியை செப்பனிடுவதற்கு கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக, குறித்த பகுதிக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்தார்.

இதன்போது சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும் குறித்த இடத்திற்கு வரவழைத்த அமைச்சர், வீதியை அமைப்பதனால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் தொடர்பாக ஆராய்ந்ததுடன், பிரதேசத்தில் வசிக்கும் மக்களையும் சந்தித்து  அபிப்பிராயங்களை கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

0000

Related posts:


நல்லாட்சி வழங்கிய தொழில் வாய்ப்புக்களை நம்பியதால் நடுவீதியில் நிற்கின்றோம் - பாதிக்கப்பட்டவர்கள் அமை...
இரணைதீவு விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி – ஜனாஸா அடக்கம் ஓட்டமாவடியில் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்...
மன்னாரில் கடலட்டை இனப் பெருக்க நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அங்குரார்ப்பணம்!