வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Tuesday, January 11th, 2022

கடற்றொழில் அமைச்சினால் செயற்படுத்தப்படுகின்ற நிறுவனங்களில் ஒன்றான வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை சீராக முன்னெடுத்து, குறித்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வலை உற்பத்தி செயற்பாடுகளை விஸ்தரித்தல் மற்றும் பணியாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்தல் போன்றவை தொடர்பான விசேட கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா மற்றும் வடகடல் நிறுவனத்தின் தலைவர், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் விடயம்சார் தரப்பினரும் கலந்து கொண்டனர்.

000

Related posts:


அராலி வள்ளியம்மை வித்தியாலய கட்டிட புனரமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!
கிளி. பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் வினைத்திறனான எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதான துறைமுக முகாமைத்துவ அத...