யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு முழுமையான வாழ்வாதார ஏற்பாடு வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Wednesday, October 10th, 2018

இழப்புகளுக்கான எதிரீடு அலுவலகமென்பது, யுத்தம் இந்த நாட்டில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கழிந்த நிலையில் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், இந்த அலுவலகம் துரித கதியில் அமையப்பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். கடந்த கால யுத்தம் காரணமாக அனைத்தையும் இழந்து நடுத் தெருவில் நிற்கின்ற எமது மக்களுக்கு இது பூரண மன நிம்மதியைத் தந்து விடாது. எனினும், அவர்களது மனக் காயங்களுக்கு ஒத்தடமாகவாவது இது அமையும் என்றே நாம் கருதுகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற இழப்பீடுகளுக்கான எதிரீடுகள் வழங்குதல் தொடர்பிலான அலுவலகம் தொடர்பில் இடம்பெறுற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த காலத்தில் புனர்வாழ்வு வழங்கப்பட்ட எமது மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் போதிய வாழ்வாதாரங்கள் இன்றிய நிலையில், மிகவும் பரிதாபகரமான வாழ்க்கையினையே மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மக்களுக்கு ஒரு முழுமையான வாழ்வாதார உதவியாக ஒரு தொகை நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என நான் ஏற்கனவே பலமுறை இந்தச் சபையின் மூலமாக கோரிக்கை விடுத்திருந்தேன். அது தொடர்பில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சரினால் ஓர் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அது அமைச்சரவையில் நிராகரிக்கப்பட்டதாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

அத்தகைய துரதிஸ்டவசமான நிலைமைகள் ஏற்படாத வகையில், கடந்த கால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு ஒரு முழுமையான வாழ்வாதார ஏற்பாடு இந்த அலுவலகத்தின் மூலமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

எனவே, தற்காலத்திலும் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதைப் போன்று, இந்த மக்களும் இந்த நாட்டு மக்கள் எனக் கருதி, அவர்களும் இந்த சமூகத்தில் வாழ வேண்டிய மக்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்து எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் இந்த மக்களின் வாழ்வாதாரங்களுக்கென ஒரு விசேட நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை ஒரு கோரிக்கையாக இங்கு முன்வைக்கின்றேன்.

Related posts:

வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் பணிப்பெண்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் தேவை - நாடாளுமன்றில் டக்...
எழுத்து மூலமான தொழிலாளர் உரிமைகள் பேணும் சட்டத்தை வடக்கிலும் அமுல்படுத்த வேண்டியது அவசியம் -  நாடாளு...
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுத் தூபி அமைக்கப்பட வேண்டும் என்கிறார் அமைச்சர் டக்ள...

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி மற்றும் நீடித்த தேவைகளை கருத்திற் கொண்டு துரித நட...
யாழ்.போதனா வைத்தியசாலை நிலைவரங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை - சுகாதார அமைச்சரிடமும் வலியுறுத...
இந்தியாவூடாக கிடைக்கும் ஆரோக்கியமான விடயங்களை மக்களுக்கானதாக்கிக் கொள்வது அவசியம் - அமைச்சர் டக்ளஸ் ...