யாழ் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவிப்பு!

Thursday, July 9th, 2020

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தங்களுடைய ஆதரவினை தெரிவித்ததுடன் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு இன்றையதினம் நடைபெற்றது.

இதன்போது குறித்த பிரதிநிதிகள் தெரிவிக்கையில் –

நீண்டகாலம் தாம் யாழ்ப்பாணத்திற்கு மீளக்குடியேறியுள்ளபோதும் தமது எதிர்காலம் தொடர்பில் தமது சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் எவரும் அக்கறைகொள்ளாமையால் தாம் நிர்க்கதியாகவுள்ளதாகவும் தமது எதிர்கால வாழ்க்கையை சிறப்பானதாக அமைப்பதற்கு எதிர்வரும் காலங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழியை தாம் பின்பற்றவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வரவுள்ள தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு தமது சமூகத்தவரது ஆதரவு பலத்தை ஒன்றுதிரட்டி வழங்குவதற்கும் தாம் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சுயலாப வார்த்தை ஜாலங்களுக்கு எடுபட்டு எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்ள வேண்டாம் - வட்டுக்கோட்டையில் டக்...
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் அதிகாரிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துக் கலந்துரையாடல்...
பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் யாழ் மத்திய பேருந்து நிலையம் - பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்...

மக்களுக்காக தம்மை அர்ப்பணிப்பவர்களே மாற்றுத்தலைமைக்குத் தகுதியானவர்கள் - டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்ப...
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணத் தொகையை 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா? – அமை...
தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி புலம்பெயர்தேச முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன் – ஊட...