யாழ் மாவட்டத்தின் விவசாய முன்மாதிரி கிராமமாக தெரிவானது ஈவினை புன்னாலைக்கட்டுவன் கிராமம் – அமைச்சர் டக்ளஸ் விவசாயிகளின் எதிர்பர்ப்புகள் குறித்து ஆராய்வு!

Saturday, May 11th, 2024

நாடு தளுவிய ரீதியில் விவசாயத்தை நவீனமயப்படுத்தி விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு மாவட்ட ரீதியில் முன்மாதிரி கிராமத்தை தெரிவுசெய்யும் முகமாக யாழ் மாவட்டத்தில் புன்னாலைக்கட்டுவன் ஈவினை கிராமம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசம் பிரதேச மக்களின் விருப்பத்தோடு தெரிவாகியுள்ள நிலையில் அப்பகுதிக்கு  விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விவசாய மக்களின் பிரச்சினைகள் மற்றும் எதிர்பர்ப்புகள் குறித்து கேட்டறிந்து கலந்துரையாடினார்.

இதேவேளை ஜனாதிபதியின் நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக நாடு தளுவிய ரீதியில்  விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மாவட்ட ரீதியில் ஒரு முன்மாதிரி கிராமத்தை தெரிவுசெய்யும் திட்டம் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


ஊரடங்கு நடைமுறையால் வெளி மாவட்டங்களில் அகப்பட்டோர் சொந்த ஊர் திரும்ப அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடி...
தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் தொடர்பாக இடத்திற்கு இடம் வித்தியாசமான அபிப்பிராயங்கள் - தீர்க்கமாக ஆரா...
அனைத்து தரப்பினரும் நன்மையடையும் வகையில், கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை முன்ன...