யாரேனும் தாகம் இருந்தால் என்னிடம் வரட்டும்:என்மேல் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும் – மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Sunday, January 5th, 2020




யாரேனும் தாகம் இருந்தால் என்னிடம் வரட்டும். என்மேல் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும் என்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், ஆன்மீக அரசியலில் ஈடுபட்டு வருகின்ற தன்னுடன் மக்கள் அணிதிண்டு கைகோர்த்தால் மக்களின வாழ்வாதார பிரச்சினைகளை மட்டுமன்றி வளமான எதிர்காலத்தையும் ஏற்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று(05.01.2019) தலைமன்னார் இறங்குதுறை கிராமம்> கீளியன் குடியிருப்பு> தாள்;பாடு மற்றும் பேசாலை உட்பட பல்வேறு பகுதிகளிலும் மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது மக்கள் தமது எதிர்பார்பம்புக்கள் மற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

இந்நிலையில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்> இருப்பதை பாதுகாத்துக் கொண்டு மக்களின் உரிமைகளையும் வளமான எதிர்காலத்தையும் பெற்றுக்கொள்கின்ற ஆன்மீக அரசியலை தான் மேற்கொண்டு வருவதாகவும் தன்னுடைய அரசியல் வழிமுறையை மக்கள் பலப்படுத்துவார்களாயின்> வளமான எதிர்காலத்தை தன்னால் ஏற்படுத்த முடியும் எனவும்; தெரிவித்தார்.

அத்துடன்> உவர்நீர் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு> கடல் பாசி வளர்ப்பு> இறால் மற்றும் நண்டு வளர்ப்பு போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்கள் அதனை உடனடியாக ஆரம்பிக்க தேவையான உதவிகள் தன்னால் வழங்கப்படும் எனவும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்> பலநாள் மீன்பிடியில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கு ஐம்பது வீதமான மானிய அடிப்படடையிலும் மீதி கடன் அடிப்படையிலும் பலநாள் மீன்பிடி கலங்களைப் பெற்றுத் தரமுடியும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், உடனடியாக தீர்த்து வைக்க கூடிய விடயங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் ஆலோசனைகளும்; வழங்கப்பட்டன.

குறிப்பாக> கீரியன் குடியிருப்பு பிரதேச கலந்துரையாடலின்போது> நடுக்குடா மீனவர்களக்கு கடந்த இருபதைந்து வருடங்களாக தீர்க்கப்படாது இருந்த இறங்கு துறையையும் இறங்கு துறைக்கான வீதியையும் அமைப்பதற்கான நடவடிக்கைளை உடனடியாக ஆரம்பிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் ஆலோசனை வழங்கப்பட்டதுடன் குறித்த பிரதேச மக்களின் வாழ்வாதார உதவிகள் தொடர்பாகவும் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தது.

அதேவேளை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: