முன்பள்ளி ஆசிரியர்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவுசெய்யப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, December 27th, 2023

எதிர்கால சிறார்களினது நலன்களை கருத்திற் கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களின் ஆற்றல்கள் மேலும் மேம்படுத்தப்பட்டு அவர்களது சேவையை விரிவுபடுத்துவதுடன் பொருளாதார ரீதியிலும் அவர்களை தூக்கி நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும்  என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் இற்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது தேவைகள்  குறித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார் .

இதன்போது பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் நீண்ட காலமாக முன்பள்ளிச் சிறார்களின் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்திருக்கும் நிலையில் இதுவரையில் குறைந்த ஊதியத்தில் கடமையாற்றுவதுடன் இதனால் தாம் குடும்ப சூழ்நிலையில்  பல்வேறு அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொண்டுவருவதாகவும் தெரிவித்ததுடன் நாட்டில் ஏனைய பிரதேசங்களில்   முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைக்கின்றன வாய்ப்புகள் போல் தமக்கும் முன்னுரிமை அடிப்படையில் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தரமாறும் அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மன்னாருக்கு வேலைவாய்ப்புக்களும் உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது - காற்றாலை அங்குரார்...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - கௌதாரிமுனை பிரதேச மக்களுக்கு இடர்கால உலர் உணவுப்பொதி விநியோகம்!
13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் - பிரதமர் ரணிலுக்கு அமைச்சர் டக்ளஸ் எட...

யுத்த வெற்றி இல்லை என்பதுடன் தமிழ்ப் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களும் இல்லாத நிலை வேண்டும்.! ...
ஊடகங்கள் கண்ணாடி போன்று பிரதிபலித்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கணிசமான தீர்வை எட்டுவேன்– டக்ளஸ் எம்ப...
வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள விவகாரம் – அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் மஹிந...