மின்கலங்களில் இயங்கும் இயந்திரங்கள் – பரீட்சார்த்த நடவடிகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 4th, 2022


…..
மீன்பிடிப் படகுகளுக்கு பயன்படுத்தக்கூடிய  மின்கலங்களில் இயங்கும் இயந்திரங்கள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பரீட்சித்துப் பார்க்கப்பட்டன.

எரிபொருள் தட்டுப்பாடு  மற்றும் விலையேற்றம் போன்றவற்றினால் நாடளாவிய ரீதியில் கடற்றொழிலார்கள் தொழில்சார் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதற்கு பரிகாரம் காணும் வகையில், மில்டன் மோட்டர்ஸ் எனும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த தொழில் முயற்சியாளர்களினால் மின்கலத்தில் இயங்கும் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குறித்த மின்கலங்கள் பொருத்தப்பட்ட படகுகளை இன்று பாணந்துறை மீன்பிடித் துறைமுகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் பார்வையிட்டதுடன், இயந்திரங்களிள் செயல் திறனை அதிகரிப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.- 04.12.2012

Related posts: