மக்கள் மீதான எமது அக்கறையே நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அமைந்தது – டக்ளஸ் எம்.பி!

Saturday, January 20th, 2018

எமக்கு அரசியல் பலம்  போதுமானதாக இல்லாது போனாலும்கூட மக்கள் மீதான எமது அக்கறையும் மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களை மேற்கொள்வதில் எமக்குள்ள ஆர்வமுமே வடக்கில் பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதுவாக அமைந்தது என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியா கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்’கையில் –

யாழ்ப்பாணத்தில் நாம் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கும் அதனை சிறப்பாக மேற்கொள்வதற்கும் அப்பகுதி மக்கள் எமக்கு ஆணையை வழங்கியிருந்தார்கள். எனவே அவ்வாறானதொரு மக்கள் நலன்சார்ந்த பணிகளை இந்த வவுனியா மாவட்டத்திலும் உள்ளூராட்சி சபைகளூடான பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுக்க நாம் தயாராக இருக்கின்றோம். அதற்கு மக்களாகிய நீங்கள் எமக்கு உரிய சந்தர்ப்பததையும் தருணத்தையும் தரவேண்டும்.

அவ்வாறானதொரு சூழல் கிடைக்கும் பட்சத்தில் முதற்கட்டமாக உள்ளூராட்சி சபைகளூடாக நாம் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை முன்னெடுத்து நடைமுறைப்படுத்திக் காட்டுவோம்.

அத்துடன் உள்ளூராட்சி மன்றங்கள் மட்டுமன்றி வடக்கு மகாணசபையையும் நாம் வென்றெடுத்து இந்த மாவட்டத்தின் பல்வேறு நிலைகளிலும் அபிவிருத்திகளை நிச்சயம் முன்னெடுப்போம்.

மக்களின் அன்றாடப் பிரச்சினை அபிவிருத்தி அரசியலுரிமைக்கான தீர்வு என்பவற்றை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வரையில் நாம் ஒருபோதும் ஓயமாட்டோம் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

Related posts:


நாட்டில் பதற்றங்கள் ஏற்படவேண்டும் என்ற கொள்கையிலேயே பலரும் இருக்கின்றீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எ...
வடமாராட்சி கிழக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் விவசாய செயற்பாடுகளுக்கான அனுமதியைப் பெற்றுத் ...
சித்தன்கேணி இளைஞனின் உயிரிழப்பு - நீதியான விசாரணை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிக்கொண்டுவரப்பட வே...