மக்களின் பலமானஆணை கிடைத்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் – செய்வதைத்தான் சொல்வேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, July 31st, 2020

தமிழ் மக்கள் இம்முறை நாடாளுமன்றத் தேர்லில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு தமது அமோக ஆதரவினைத் தந்தால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்விக்க என்னால் முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் .

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில் எனது சொல்லும் செயலும்  ஒன்றாகவே பயணிக்கிறது இதனை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.மக்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேறும் வரை  ஓயமாட்டேன்.

 ஆகவே தமிழ் மக்கள் தமது வாக்குப் பலத்தினால் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு அதிக ஆசனங்களை பெற்றுக்கொடுக்கும் சந்தர்ப்பத்தில்  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை  முன்னின்று செயற்படுவேன் என அமைச்சர்   மேலும் தெரிவித்தார்.

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டம் வெற்றி: இறால் அறுடைக்கான அனுமதிக்கான அனுமதிகளை வழங்கியது ...
கரைவலை மீன்பிடித் தொழிலில் காணப்படும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமை...
நீர் வேளாண்மை ஊடாக மன்னார் மாவட்டத்தை கடலுணவின் பொருளாதார கேந்திர வலயமாக மாற்றியமைப்போம் - ஓலைத்தொடு...