மக்களின் பலமானஆணை கிடைத்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் – செய்வதைத்தான் சொல்வேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, July 31st, 2020

தமிழ் மக்கள் இம்முறை நாடாளுமன்றத் தேர்லில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு தமது அமோக ஆதரவினைத் தந்தால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்விக்க என்னால் முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் .

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில் எனது சொல்லும் செயலும்  ஒன்றாகவே பயணிக்கிறது இதனை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.மக்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேறும் வரை  ஓயமாட்டேன்.

 ஆகவே தமிழ் மக்கள் தமது வாக்குப் பலத்தினால் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு அதிக ஆசனங்களை பெற்றுக்கொடுக்கும் சந்தர்ப்பத்தில்  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை  முன்னின்று செயற்படுவேன் என அமைச்சர்   மேலும் தெரிவித்தார்.

Related posts:

கிளிநொச்சியை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியதுபோல் மக்களது வாழ்வியலையும் பலப்படுத்து வேன் - டக்ளஸ் தே...
யாழ். - பாண்டிச்சேரி இடையில் போக்குவரத்து சேவை: அமைச்சர் டக்ளசின் முயற்சிக்கு அமைச்சரவை பச்சைக் கொட...
பொருளாதார மீள்ச்சி பற்றிய நம்பிக்கையினை சமூகமயப்படுத்த வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்த பொதுத் தினமும், பொதுத் தூபியும் அவசியம் - நாடாளும...
யாழ் போதனா வைத்தியசாலை தொழிலாளர் சங்க நிர்வாகத்தினர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முற...
போக்குவரத்து நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்கு ஏற்பாடுகளை செய்துதருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ...