மக்களின் தேவைகளை தீர்ப்பதற்கு முன்னின்று உழையுங்கள் – நிர்வாக செயலாளர்களிடம் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, August 16th, 2018

மக்கள் எதிர்கொண்டுவரும் வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்புகள் தொடர்பான பிரச்சினைகளின் தேவைகளை அறிந்து சிறப்பானதும் தூரநோக்குள்ளதுமான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதனூடாகவே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும்.

அந்தவகையில் மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான  வழிமுறைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் நடைபெற்ற வடக்கு கிழக்கு மாவட்டங்களின் கட்சியின் நிர்வாக செயலாளர்கள் உதவி நிர்வாக செயலலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் நாம் பல்வேறுவகையான அபிவிருத்தி திட்டங்களையும் கட்டுமாணங்களையும், மக்கள் நலன்சார் திட்டங்களையும், தொழில் வாய்ப்புக்களையும் எமது மக்களுக்காக  பெற்றுக்கொடுத்திருக்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

1 5

Related posts:

நடைபெற்ற வன்முறையை ஒட்டுமொத்த இலங்கை தேசமும் எதிர்த்து குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது – ஊடகவி...
தமிழ் மக்கள் முன்னால் 3 அரசியல் உள்ளது - தரகு அரசியல், சவப்பெட்டி அரசியல், நடைமுறைச்சாத்தியமான அரசிய...
கிடைக்கின்ற சந்தர்பங்களை மக்கள் சாமர்த்தியமாக பயன்படுத்தி நன்மைகளை பெறவேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவ...

ஏழையின் வெறும் தேநீரில் அறவிடப்படுகின்ற வரிகள் செல்வந்தர்களின் மாடமாளி கைகளுக்கென அறவிடப்படு கின்றனவ...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – பாதிக்கப்பட்ட கொடுவா மீன் வளர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கான 3 ஆம் கட்...
புதிய அத்தியாயத்தில் கால் பதிக்கும் கடற்றொழில் - மின்சாரத்தில் இயங்கும் வெளியிணைப்பு இயந்திர பொறிமு...