பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் பொருத்தமான பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்து!

Wednesday, November 23rd, 2016

வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தம் காரணமாக அவயவங்களை இழந்து மாற்றுத் திறனாளிகளாக ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் பெண் தலைமைத்துவங்களைக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகமாகும். அத்துடன் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளும் அதிகளவில் பொருத்தமான வாழ்வாதாரங்கள் அற்ற நிலையில் மிகவும் கஷ்டமானதொரு வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இவர்களை இனம் கண்டு இவர்களுக்கான வாழ்வாதாரங்களை முன்னெடுக்கத்தக்க வகையில் போதிய கொள்கைத்திட்டம் ஒன்று அவசியமாக உருவாக்கப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றுமுன்தினம்(21) 2017 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அவர் இதுதொடர்பாக மேலும் உரையாற்றுகையில் –

தற்பொழுது நாட்டில் நடைமுறையிலுள்ள பொதுவான நிவாரணத் திட்டங்களால் எம்மக்களின் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்க்க முடியாது என்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இவ்வாறான பிரச்சினைகள் எமது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளாக மாத்திரமன்றி உணர்வு ரீதியான பிரச்சினைகளாகவும் உருவெடுத்துள்ளன. எனவே இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு உடனடியாக ஏற்பாடுகள் தேவை என்பதை இங்கு நான் வலியுறுத்த விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

13

 

Related posts:

வியாபார நிறுவனங்கள் இனவாதத்தைக் கையாள்வதை நிறுத்த வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது கானல் நீராகவே இருக்கும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.மாவட்ட தலைமை அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்.

கல்விக் கொள்கையில் மாற்றாந்தாய் மனப்பான்மை இருக்கின்ற போது சமச்சீரான சமூகத்தை எவ்வாறு உருவாக்கப் முட...
மகளிர் கடற்றொழில் அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு – அமைச்சர் டக்...
கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் விநியோகத்தை தடையின்றி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ...