பிராந்திய விளையாட்டுக் கழகங்கங்களும் வலுமை மிக்கதாகக் கட்டியெழுப்பப்படவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Monday, December 5th, 2016

இந்த ஆண்டு தேசிய ரீதியிலான விளையாட்டுப் போட்டிகளில் கிழக்கு மாகாணம் 8 வது இடத்தையும், வடக்கு மாகாணம் 9வது இடத்தையும் பெற்றிருக்கின்ற நிலையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் விளையாட்டுத் துறையை கட்டியெழுப்பும் நோக்கில் பாடசாலை மட்டங்களிலிருந்தே அதனை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சின் செயலாளர்நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கயிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

கபடி உட்பட ஏனைய தேசிய ரீதியிலான விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், கடற்கரை விளையாட்டுக்களை மேலும் வளர்த்தெடுக்கக் கூடிய செயற்திட்டங்களை அப் பகுதிகளில் முன்னெடுக்குமாறும், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பிராந்திய விளையாட்டுக் கழகங்களை வலுமிக்கதாக மேம்படுத்தி, அவற்றை ஏனைய மாவட்டங்களுடன் தொடர்புபடுத்தும் நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்குமாறும், குறிப்பாக முன்னாள் யுத்த வலயங்களான வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள இளைஞர், யுவதிகளை அதிக பட்சம் விளையாட்டுத் துறையுடன் இணைத்து, அவர்களை N;;மம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து உதவுமாறு கௌரவ அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களிடம் கேட்டுக் கொள்வதுடன், கடந்த பெப்ரவரி மாதம் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்வானந்த சொனோவால் அவர்களுடன் கௌரவ அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்கள் கலந்துரையாடியதாக அறிகின்றேன். அந்த வகையில், இந்திய அரசின் உதவிகளைப் பெற்றும் மேற்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்வதுடன், யாழ் துரையப்பா விளையாட்டரங்கு புனரமைப்புப் பணிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதன் பணிகள் ஒழுங்குற மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Untitled-2 copy

Related posts: