வடக்கு -கிழக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்தது.!

Thursday, December 21st, 2017

யாழ் மாவட்டத்தின் 16 உள்ளூராட்சி மன்றங்களின் வேட்பு மனுக்களை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கனவே சாவகச்சேரி நகரசபைக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் ஏனைய 16 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வகையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று வடக்கு கிழக்கு மாவட்டங்களில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில் வேட்பு மனுக்களை இன்றையதினம் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர்கள் மற்றும் பிரதேச நிர்வாக செயலாளர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், என பலர் கலந்துகொண்ருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அனுராதபுரம் சிறையில் சந்தேகநபர் தாக்குதல் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டா? சபையில் டக்ளஸ் தேவானந...
நீர் வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் நண்டு வளர்ப்பாளர்களுக்கு காசோலைளை வழங்கினார் அமைச்சர் டக்ளஸ்!
ஊர்காவற்துறை தள வைத்தியசாலைக்கான உயிர் காக்கும் கருவிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வைத்தியசாலை...

வெளியாரின் முதலீடுகளும் தொழில்நுட்ப அனுபங்களும் எமது மக்களின் வாழ்வியலை வலுப்படுத்துமாயின் அவை வரவேற...
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வாழ்க்கை செலவு கூட்டத்தில் ஆராய்வு – திங்களன்று அம...
தேசிய மாநாட்டிற்கு தயாராகுங்கள் - கட்சி உறுப்பினர்களுக்கு தோழர் டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்!