வடக்கு -கிழக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்தது.!

Thursday, December 21st, 2017

யாழ் மாவட்டத்தின் 16 உள்ளூராட்சி மன்றங்களின் வேட்பு மனுக்களை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கனவே சாவகச்சேரி நகரசபைக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் ஏனைய 16 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வகையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று வடக்கு கிழக்கு மாவட்டங்களில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில் வேட்பு மனுக்களை இன்றையதினம் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர்கள் மற்றும் பிரதேச நிர்வாக செயலாளர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், என பலர் கலந்துகொண்ருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல பரிச்சயம் கொண்டவர்களை ஏன் நியமிக்க முடியாது? நாடாளுமன்றில் டக்ளஸ...
மின்சார நெருக்கடி ஏற்படுமென ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படாதிருந்தது ஏன் -...
வலி வடக்கு மக்களின் ஒரு பகுதி காணிகள் சுதந்திர தினத்துக்கு முன் கையளிக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் த...