பாடநூல் தவறுகளைத் திருத்த அமையப்பெற்றது விஷேட குழு !

Sunday, February 5th, 2017

பாடநூல்களில் தமிழ் பேசும் மக்களின் வரலாறுகள் மறைக்கப்பட்டும், திரிபுபடுத்தப்பட்டும் இருப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியும், கல்வி அமைச்சில் அதிகாரிகளுடன் கலந்துரையாடியும் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, தமிழ் பாடநூல்கள் தயாரிக்கும் உத்தியோகத்தர்களுக்கு துறைசார் ஆலோசனைகளை வழங்குவதற்கு விஷேட குழு ஒன்றை அமைப்பதற்கான கலந்துரையாடல் கொழும்பில் இன்று ( 05.02.2017) நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் மூத்த தமிழ் வரலாற்றுப் பேராசியர்களும், துறைசார் விரிவுரையாளர்களும்,கலந்து கொண்டிருந்தனர். வரலாற்றுப் பாடநூல்களில் மட்டுமல்லாமல்,தமிழ் பாடம், இந்து சமயப் பாடங்களிலும் பல்வேறு தவறுகளும், குறைபாடுகளும் காணப்படுவது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

இன்றைய கலந்துரையாடலின் இறுதியில் தமிழர் வரலாறு மற்றும் தமிழ் பாடங்களை ஆழமாக கற்றறிந்த நிபுனத்துவம் வாய்ந்த ஒன்பது பேர் அடங்கிய விஷேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர்,தமிழர் வரலாறு, தமிழ் மற்றும் இந்து சமயம் ஆகிய பாடப்புத்தகங்களில் காணப்படும் குறைபாடுகளையும், தவறுகளையும் திருத்திக்கொள்வது தொடர்பாக கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பணிகளை முன்னெடுப்பார்கள்.

இவ்விடயங்கள் தொடர்பாக கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியான கலந்துரையாடல்களும், ஆய்வுகளும் நடைபெற்றுவந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

IMG_2987
IMG_2985

Related posts:

மக்களை மறந்த தலைமைகளு க்கு பாடம்புகட்ட இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டும் - பட்டதாரிகள் மத்தியில் டக்...
வடக்கு தமிழ் மக்களை இந்தியா மறந்து விடவில்லை என்பதன் எடுத்துக்காட்டே இந்த மனிதாபிமான உதவிகள் – அமைச்...
ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தில் பச்சிலைப்பள்ளி எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் வருமானம் மூன்று இலட்சம...

பாதுகாப்பற்ற ரயில் கடவை பணியாளர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - டக்...
இடை நிறுத்தப்பட்ட பணியாளர்களின் நிலை தொடர்பில் அமைச்சரவையில் எடுத்துரைப்பேன் - அமைச்சர் டக்ளஸ் தேவான...
இறால் அறுவடையே எமக்கு வாழ்வாதாரமாக உள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பயனாளிகள் நன்றி தெரிவிப்...