பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு உடன் அமுலாகும் வகையில் தடை – யாழ் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிரடி அறிவிப்பு!

Thursday, April 18th, 2024


யாழ். மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் – நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்பதாக பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி அபிவிருத்தி சட்டவிதி முறைகளை கருத்தில் கொள்ளாமலும் செல்வதால் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காகவும், பின்னர் வீடு செல்லும் போதும் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இன்நிலையிலேயே குறித்த நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts:

புதிய ஆண்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ...
யாழ் மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு முன்வந்துள்ள தொழில் முனைவோரின் கோரிக்கைகள் யாவும் ப...
யாழ் ஒருங்கிணைப்புக் குழு துரித நடவடிக்கை - வழமைக்கு திரும்பியது காரைநகர் - ஊர்காவற்துறை போக்குவரத்...

இன்றைய உங்கள் எழுச்சி எதிர்கால மகிழ்ச்சிக்கு அத்திவாரம் - பேரெழுச்சியுடன் முல்லையில் திரண்ட மக்கள் ...
பேருவளையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தினக் கொண்டாட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
இழுவை மடி முறையில் இறால் பிடிக்கும் தொழில் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது ஆய்...