பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு உடன் அமுலாகும் வகையில் தடை – யாழ் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிரடி அறிவிப்பு!

Thursday, April 18th, 2024


யாழ். மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் – நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்பதாக பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி அபிவிருத்தி சட்டவிதி முறைகளை கருத்தில் கொள்ளாமலும் செல்வதால் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காகவும், பின்னர் வீடு செல்லும் போதும் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இன்நிலையிலேயே குறித்த நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts:

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அட்டூழியங்களுக்கு அமைச்சரவை பத்திரம் – போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாள...
இந்திய தனியார் முதலீட்டாளர் பங்களிப்பு - கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்களை அமைப்பது தொடர்பில் அம...
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான புதிய திருத்தப்பட்ட சட்ட மூலம் - துறைசார் நிபுணர்களின் கருத...

வழிகாட்டியாக மட்டுமன்றி எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுத்தரக் கூடியவராக இருக்கும் தலைவர் டக்...
ஆரம்ப பாடசாலைகளுக்கும் உடற்பயிற்சி ஆசிரியர்களது பதவிநிலை அவசியம் - நடவடிக்கை மேற்கொண்டுதருமாறு கல்...
தரித்து வைக்கப்பட்டுள்ள படகுகளால் மயிலிட்டி துறைமுகத்தில் அசௌகரியம் – தீர்வு வழங்கும் நடவடிக்கையில...