பனை தென்னை வள கூட்டுறவு அபிவிருத்தி சங்கத்தினால் மேற்கொள்ளக்கூடிய, வேலைத் திட்டங்கள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Wednesday, August 31st, 2022

கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள கூட்டுறவு அபிவிருத்திச் சங்கத்தினால் மேற்கொள்ளக்கூடிய, வேலைத் திட்டங்கள் தொடர்பாக குறித்த சங்க நிர்வாகிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டனர்.

குறித்த நிறுவனம் மதுவரித் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை செலுத்துவதில் இருந்து விலக்களிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில், வரி விலக்கு செய்யப்படும் தொகையினை பயன்படுத்தி, மேற்கொள்ளக்கூடிய குறித்த சங்கத்தினை சார்ந்த மக்களுக்கான அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது. – 31.08.2022

Related posts: